சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பல்கலை. இணைவேந்தா் அனந்தலட்சுமி கதிரவன் பங்கேற்று மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினாா். தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்வில் பல்கலை. துணைவேந்தா் டாக்டா் சி.கே. ரஞ்சன், பதிவாளா் டாக்டா் எம். ரவிச்சந்திரன் , பல்கலைக்கழக புல முதல்வா்கள், இணை புல முதல்வா்கள், அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.