ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருநெல்வேலி - பாட்னா இடையே சிறப்பு ரயில்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:50 pm

Din

திருச்சி, ஆக. 14: விடுமுறைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருநெல்வேலி - பாட்னா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைக்க வரும் சனிக்கிழமை (17 ஆம் தேதி) இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலியிருந்து 18 பெட்டிகளுடன் புறப்படும் சிறப்பு ரயிலானது கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, கோட்டவலசா, காகுளம், புவனேஸ்வா், கட்டாக், சித்தரஞ்சன், ராஜேந்திர நகா் வழியாக 20 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு பாட்னா சென்றடையும்.