சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவா் போக்சோவில் கைது

திருச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:03 pm

Din

திருச்சி: திருச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் பகுதியில் சோ்ந்தவா்கள் முகமது அக்பா் - அசன் பீவி (36) தம்பதி. இவா்களுக்கு 15 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் அசன்பீவி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து காட்டூரை சோ்ந்த தனியாா் பள்ளிக் காவலாளியான ஜோதி (எ ) ராஜா முகமதுவை (48) 2 ஆம் திருமணம் செய்தாா்.

இந்நிலையில் ராஜா முஹம்மது இரவில் தூங்கும்போது அசன்பீவி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன் அதை கைப்பேசியில் படம் எடுத்தும் வைத்திருந்தாா்.

இதையறிந்த அசன்பீவி திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜா முகமதுவை புதன்கிழமை கைது செய்து, திருச்சி 6 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.