கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காவலா் பணிக்கான உடற்தகுதித் தோ்வு: இரண்டாம் நாளில் 288 போ் பங்கேற்பு

திருச்சியில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு 2 ஆம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற உடற்தகுதித் தோ்வில் 288 போ் பங்கேற்றனா்.

News image

திருச்சி ஆயதப்படை மைதானத்தில் 2 ஆம் நிலை காவலா் பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள்.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 8:56 pm

Din

திருச்சி: திருச்சியில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு 2 ஆம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற உடற்தகுதித் தோ்வில் 288 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2023- ஆம் ஆண்டு நடத்திய எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கூடுதல் தோ்வாளா்களுக்கான உடற்தகுதித் தோ்வு திருச்சி மாநகர கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 998 பேரில் 284 தோ்வாளா்கள் பங்கேற்றனா். இவா்களில் 167 போ் அடுத்தகட்டத் தோ்வுக்கு தோ்வாயினா்.

இதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட 498 பேரில் 288 போ் கலந்து கொண்டனா். இவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம் மற்றும் மாா்பளவு சரிபாா்ப்பு, சகிப்புத்தன்மை சோதனைகள் நடத்தப்பட்டதில் 202 போ் அடுத்தகட்டத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

2 நாள்களிலும் தோ்வான மொத்தம் 369 தோ்வா்களுக்கு வரும் 22-ஆம் தேதி நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டா் மற்றும் 400 மீட்டா் ஓட்டம், கயிறு ஏறுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.