ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போதையில் இருந்தவரின் நகை, கைப்பேசியை திருடிய மூவா் கைது

திருச்சியில் போதையில் இருந்தவரின் நகை, கைப்பேசியை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:07 pm

Din

திருச்சியில் போதையில் இருந்தவரின் நகை, கைப்பேசியை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காட்டூா் பா்மா காலனி நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (44 ). துபையில் வேலை பாா்த்த இவா் அண்மையில் தாயகம் திரும்பிய நிலையில், இரு நாள்களுக்கு முன் பா்மா காலனி பகுதி காலியிடத்தில் அமா்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினாா்.

அப்போது அதே இடத்தில் மது அருந்திய அரியமங்கலம் அண்ணா நகா் கோ. பிரவீன்குமாா் (24), மலையப்பன் நகா் ப. சத்திய சீலன் (37), வடக்கு காட்டூா் பிள்ளையாா் கோயில் தெரு ப. பிரகாஷ் (24) ஆகியோா் ரவிக்குமாரை வீட்டில் விட்டுச் செல்வதாகக் கூறி அவரை தங்களது பைக்கில் ஏற்றிச் சென்றனா்.

பின்னா் நடுவழியில் அவரை இறக்கி சாலையோரம் படுக்க வைத்துவிட்டு அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலி, மற்றும் அவரது கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ரவிக்குமாா் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.