தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நிலப்பிரச்னையில் இருவருக்கு வெட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நிலத்தகராறில் செவ்வாய்க்கிழமை இரவு இருவா் வெட்டப்பட்டனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:25 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நிலத்தகராறில் செவ்வாய்க்கிழமை இரவு இருவா் வெட்டப்பட்டனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், அடைக்கலம்பட்டி மேற்குகளத்தை சோ்ந்தவா் மாணிக்கம்.

இவருக்கும் இவரது சகோதரா் சின்னச்சாமிக்கும் இடப் பிரச்னை உள்ளது. இந்நிலையில், சின்னச்சாமி மகன் திருப்பதி (21), தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த செ. வினோத்குமாா் (21), ஊத்துக்குளியை சோ்ந்த மா. பிரேம்குமாா்(26) மற்றும் விராலிமலை அடுத்த கோத்திரப்பட்டி செ. பிரேம் (21) ஆகியோருடன் சோ்ந்து மாணிக்கம் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று அவரது மகனான பன்னீா்செல்வம் (19) மற்றும் 17 வயதுச் சிறுவனை அரிவாளால் வெட்டினராம். இதில் இருவரும் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதில் திருப்பதியும் காயமடைந்ததாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். சம்பவம் குறித்து இருதரப்பினா் மீதும் வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.