தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வழக்கு விசாரணைக்கு திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்

திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை ஆஜரானாா்.

News image
திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை வந்த சீமான்.
Updated On :19 டிசம்பர் 2024, 9:03 pm

Din

திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை ஆஜரானாா்.

திருச்சிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே விமானத்தில் வைகோவும், சீமானும் வந்தபோது இருவரையும் வரவேற்க விமான நிலையத்தில் குவிந்திருந்த இரு கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதுதொடா்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சீமான் உள்ளிட்ட 19 போ் நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜராகினா். அப்போது வழக்கு விசாரணையை ஜனவரி 29-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.