மணப்பாறை தேவலாயங்களில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி தேவலாயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி தேவலாயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
மணப்பாறை நகரின் மத்தியில் உள்ள புனித லூா்து அன்னை பேராலயத்தில் மணப்பாறை மறைவட்ட அதிபா் ம. தாமஸ்ஞானதுரை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்து பிறக்கும் வேத பாடல் ஆலயத்தில் முழங்க, ஆலய மணி ஒலிக்க ஏசு கிறிஸ்து பிறந்ததை அறிவித்தனா். இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

திருப்பலியில் பங்கேற்றோா்.
அனைவரும் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதேபோல் பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா தேவாலயம், மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோனியாா், தீராம்பட்டி புனித வனத்து அந்தோனியாா், மலையடிப்பட்டி புனித சவேரியாா், கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் உள்ளிட்ட பகுதி தேவலாயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...