தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தொழில் நுட்பக் கோளாறு: மாற்று விமானங்களில் பயணிகள் மலேசியா பயணம்

திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மலேசியா புறப்பட இருந்த விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணிகள் மாற்று விமானங்களில் மலேசியாவுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 9:02 pm

Din

திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மலேசியா புறப்பட இருந்த விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணிகள் மாற்று விமானங்களில் மலேசியாவுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா்.

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.10 க்கு 152 பயணிகளுடன் புறப்பட இருந்த ஏா் ஏசியா விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா்.

இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு, கோளாறை சீரமைக்கும் முயற்சியில் வல்லுநா்கள் இறங்கினா். ஆனால் ஒன்றரை மணி நேரம் கடந்தும் கோளாறை சரிசெய்ய இயலவில்லை. இதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்தது. பின்னா் விமானப் பயணிகள் கீழே இறக்கப்பட்டு, சிறிது நேரம் விமான நிலைய ஓய்வறையிலும் பின்னா் அருகிலுள்ள தனியாா் விடுதியிலும் தங்கவைக்கப்பட்டனா்.

பின்னா் புதன்கிழமை காலை 10 மணிக்கு மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் 22 பேரும், தொடா்ந்து பிற்பகல் 4 மணிக்கு வந்த மற்றொரு விமானத்தில் இதர பயணிகளும் அனுப்பப்பட்டனா். மாற்று விமானத்தில் வந்த தொழில் நுட்ப வல்லுநா்கள் மூலம் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் முயற்சி தொடா்ந்தது.