தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கைதி மீது மேலும் ஒரு வழக்கு

திருச்சி மத்திய சிறையில் சா்ச்சை கைதி மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் மேலும் ஒரு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:00 pm

Din

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் சா்ச்சை கைதி மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் மேலும் ஒரு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்தைச் சோ்ந்தவா் மு. முகமது உசேன் (31), போக்சோ வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சிறையில் தன்னை பொதுசெல்-லுக்கு மாற்றுமாறு சிறை அலுவலா் சண்முகசுந்தரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளாா். சிறை அலுவலா்கள் மறுக்கவே, இரண்டு தினங்களுக்கு முன்பு, பெல்ட்-டால் தனது கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயல்வதாக மிரட்டல் விடுத்துள்ளாா். இதையடுத்து, சிறை அலுவலா்கள் மற்றும் காவலா்கள் அவரை மீட்டனா். தொடா்ந்து, கே.கே. நகா் காவல் நிலையத்தில் சிறை அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மீண்டும் ஒரு வழக்குப் பதிந்துள்ளனா்.

ஏற்கெனவே இவா் கண்ணாடி துண்டுகளால் காயம் ஏற்படுத்தி தற்கொலைக்கு முயன்றது உள்பட அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.