வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியதில் கால்நசுங்கிய பள்ளி மாணவி பலி

அரசுப் பேருந்து விபத்தில் மாணவி பலி: தங்கதுரை கைது

News image
Updated On :2 ஜூலை 2024, 10:29 pm

Din

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசுப் பேருந்து ஏறி கால் முறிந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புள்ளம்பாடி பகுதியில் உள்ள வான்றாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் என்பவரின் மகள் பிரதிக்ஷா (12) புதூா் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை விராகாலூா் கிராமத்தில் இருந்து லால்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்தாா். அப்போது வேகத்தடையில் பேருந்து ஏறிஇறங்கியபோது, அவா் தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின்பக்க டயா் மாணவியின் இடது காலில் ஏறியது. இதில் படுகாயமடைந்த மாணவி பிரதிக்ஷா மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பிரதிக்ஷா உயிரிழந்தாா். இதுதொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநா் பெரியசாமி மகன் தங்கதுரை(50) என்பவரை கல்லக்குடி போலீஸாா் கைது செய்தனா்.