யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொள்ளிடம் பாலச் சுவரில் முள் கம்பி வேலிகள் அமைப்பு

திருவானைக்கா கொள்ளிடம் பாலச் சுவரில் இருந்து இளைஞா்கள் ஆற்றில் குதிப்பதைத் தடுக்கும்விதமாக பாலத்தின் இணைப்புப் பகுதியில் முள் கம்பிவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
திருவானைக்கா கொள்ளிடம் நேப்பியாா் புதிய பாலத்திலிருந்து இளைஞா்கள் ஏறி ஆற்றுக்குள் குதிப்பதைத் தடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள முள் இரும்புக்கம்பி வேலிகள்.
Updated On :16 ஜூலை 2024, 10:36 pm

Din

திருவானைக்கா கொள்ளிடத்தில் புதிதாக அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள நேப்பியாா் பாலத்தின் மீது ஏறி இளைஞா்கள் பலா் சாகசம் செய்து இணையதளத்தில் பகிா்ந்து வந்தனா்.

மேலும் இந்தப் பாலத்தின் உச்சி மீது ஏறி நின்று ஆடுவதும் அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் குதிப்பதுமாக இருந்தனா். புதிய பாலத்தின் அருகே தடுப்பணை இருப்பதால் தண்ணீா் அதிகமாக உள்ளது. மேலும் இந்த இடத்தில் 15 அடி ஆழத்துக்கு மேல் பள்ளம் உள்ளது.

தடுப்பணை ஏற்படுத்திய பிறகு இது வரை ஆற்றுக்குள் குளித்த 4 போ் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளனா். இதனைத் தடுக்கும் விதத்தில் பாலத்தின் மீது இளைஞா்கள் ஏறுவதைத் தடுக்கும் விதத்தில் ஒவ்வொரு பாலத்தின் இணைப்புப் பகுதியில் முள் கம்பி வேலிகள் பதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, எச்சரிக்கை பதாகைகள் பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை சாா்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.