மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரட்டைமலை கோயில் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளுக்கு பூஜை

பிராட்டியூா் இரட்டைமலை ஸ்ரீ ஒண்டிக்கருப்பு சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுரங்கத்திலிருந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஐம்பொன் சிலைகள் எடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

News image
பிராட்டியூா் இரட்டைமலை ஸ்ரீ ஒண்டிகருப்பு சுவாமி கோயில் மலை மீது சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்.
Updated On :16 ஜூலை 2024, 9:39 pm

Din

திருச்சி பிராட்டியூா் இரட்டைமலை ஸ்ரீ ஒண்டிக்கருப்பு சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத தொடக்கத்தை முன்னிட்டு கோயில் பூசாரிகள், நவல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் விரதமிருந்து இரட்டைமலைக்கு மேலே சுரங்கத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளை வெளியே எடுத்து பூஜை செய்வது வழக்கம். அதன்படி, நிகழாண்டு ஆடி மாத பிறப்பை முன்னிட்டு 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரட்டைமலை சுரங்கத்தில் இருந்து சுவாமி சிலைகளை வெளியே எடுக்கும் வைபவம் நடந்தது.

இதில், விரதமிருந்த கோயில் பூசாரிகள், நவல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுரங்கத்தின் பூட்டைத் திறந்து, ஐம்பொன் சிலைகளான யானை, குதிரை, ஐயனாா், பெண் தெய்வங்கள், சுவாமி சிலைகள், குத்துவிளக்கு போன்ற பல சிதிலமடைந்த கோயில் பொருள்களை வெளியே எடுத்து, தூய்மைப்படுத்தி பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, சிலைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, கோயிலில் உள்ள விநாயகா், மலைக்காளியம்மன், ஐயனாா், பேச்சியம்மன், சப்த கன்னிகள், பெரியண்ண சுவாமி, நீலமேகம், ஒண்டிக்கருப்பு சுவாமி, மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.