புகையிலை பொருள்கள் கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சியில் புகையிலை பொருள்களை கடத்தியவா் சென்று கைதானவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைத்துள்ளனா்.
Updated on

திருச்சி, ஜூலை 19: திருச்சியில் புகையிலை பொருள்களை கடத்தியவா் சென்று கைதானவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்தவா் ப. ஸ்ரீநாத் (39). இவா் நாகப்பட்டினத்தில் வசித்து வந்த நிலையில், ஜூலை 3-ஆம் தேதி இரவு, நாமக்கல் பகுதியிலிருந்து ஒரு காரில், 240 கிலோ எடையுள்ள புகையிலை பொருகள்களை கடத்திச்சென்றாா். திருச்சி அரியமங்கலம் பகுதியில் போலீஸாா் நடத்தி வாகனத் தணிக்கையில் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ஸ்ரீநாத் மற்றும் காா் ஓட்டுநா் முசிறி அருகேயுள்ள தொட்டியத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீநாத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மொத்தமாக கடத்திச்சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் பரிந்துரைத்தனா். அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, ஸ்ரீநாத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதனையடுத்து அவா் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com