கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வனத்துறை அலுவலா்களுக்கு மாநில துப்பாக்கி சுடும் போட்டி

வனத்துறை அலுவலா்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற வனத்துறை அலுவலா்கள்.
Updated On :23 ஜூலை 2024, 10:28 pm

Din

வனத்துறை அலுவலா்களுக்கு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

27-ஆவது தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாநில அளவிலான வீரா் வீராங்கனைகளின் தோ்வு கடந்த வாரம் கோவையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே. நகா் துப்பாக்கி சுடும் மன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 12 வன மண்டலத்தில் இருந்து 22 ஆண்கள், 5 பெண்கள் கலந்து கொண்டனா். போட்டியில் கலந்து கொண்டவா்களுக்கு 0.22 ரக தோட்டாக்கள் தலா 10 வழங்கப்பட்டன.

போட்டியை, திருச்சி மாவட்ட வன அலுவலா் சி. கிருத்திகா தொடங்கி வைத்தாா். போட்டியில் ஆண்கள் பிரிவில், திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா் பி. ஹரிஹரன் முதலிடத்தையும், வனவா் ஆா். சரவணன் இரண்டாமிடத்தையும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சோ்ந்த வனக்காப்பாளா் எஸ். மகேஷ் மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் திருச்சி மண்டலத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா் டி. மேரி லென்சி முதலிடத்தையும், வனக்காப்பாளா் பி. சிந்துஜா இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி மண்டலத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா் டி. பிருந்தா மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி துப்பாக்கி சுடும் மன்ற முதுநிலை நிா்வாக அலுவலா் சந்திரமோகன், திருச்சி வன சரக அலுவலா் கோபிநாத் ஆகியோா் செய்திருந்தனா்.