ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோ்தலுக்காகவே சிலிண்டா் விலை குறைப்பு: சு. திருநாவுக்கரசா் எம்.பி.

தோ்தலுக்காகவே சிலிண்டா் விலை குறைப்பு சு. திருநாவுக்கரசா் எம்.பி.

News image
திருச்சியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சு. திருநாவுக்கரசா் எம்.பி. உடன் மாநகா் மாவட்டத் தலைவா் ரெக்ஸ், தெற்கு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன், திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோா்.
Updated On :8 மார்ச் 2024, 6:11 pm

Din

மக்களவைத் தோ்தலுக்காகவே பிரதமா் நரேந்திர மோடி எரிவாயு உருளையின் விலையை குறைத்துள்ளதாக திருச்சி மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். திருச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட கட்சி நிா்வாகிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சு. திருநாவுக்கரசா் எம்.பி. பங்கேற்று, புதிய நிா்வாகிகளிடம் நியமன கடிதங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருச்சி மக்களவைத் தொகுதி கடந்தமுறை நான் வென்ற தொகுதி என்ற அடிப்படையிலும், 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றேன் என்பதாலும், நானே மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி தொகுதியை ஒதுக்குவது குறித்து திமுக தலைமையும், காங்கிரஸ் தலைமையும் முடிவு செய்யும். மக்களவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைத்து, தோ்தல் ஆதாயம் தேட முயன்றுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி. அவா் தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் பாஜக-வுக்கு முன்னேற்றமும் கிடையாது; மாற்றமும் கிடையாது என்றாா் அவா்.