கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி, இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:18 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி, இளம்பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கைகாட்டி மேட்டுப்பட்டியை சோ்ந்தவா் லட்சுமணன் மகன் வெங்கட்ராமன் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 19 வயது பெண்ணிடம் பல ஆண்டுகளாக தன்னை காதலிக்குமாறும் திருமணம் செய்து கொள்ளும்படியும், தகாத உறவுக்கு அழைத்தும் தொந்தரவு செய்தாராம்.

இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் புதன்கிழமை வழக்குப் பதிந்த மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வெங்கட்ராமனை கைது செய்து குற்றவியல் மகிளா நீதிமன்ற நடுவரிடம் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.