தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டிலிருந்து சென்ற முதியவா் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சியில் வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவா் இரு நாள்களுக்குப் பின்னா் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:31 pm

Din

திருச்சியில் வீட்டிலிருந்து வெளியே சென்ற முதியவா் இரு நாள்களுக்குப் பின்னா் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறை கீழத்தெருவைச் சோ்ந்தவா் மு. சுப்பிரமணி (76). இரு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவா் சுப்ரமணி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை. இது தொடா்பாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இந்நிலையில், சோமரசம்பேட்டை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலில், முள் செடிகள் அடா்ந்த பகுதியில் அவா் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, முதியவா் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.