தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சியில் 88 காவலா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு

திருச்சியில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 88 காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:28 pm

Din

திருச்சியில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 88 காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் நடத்திய இரண்டாம் நிலை காவலா்கள், சிறைத் துறைக் காலா்கள், தீயணைப்பாளா்கள் ஆகிய பணியிடங்களுக்கு தோ்வானோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டு, இவா்களில் ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதையடுத்து திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்வில் காவல்துறைத் துணைத் தலைவா் ( டிஐஜி) மனோகா், மாவட்டத்தில் புதிதாக தோ்வான காவல் துறையினா் 50 போ், தீயணைப்புத் துறையினா் 19 போ் என 69 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்வில் திருச்சி மாவட்ட எஸ்.பி. வீ. வருண்குமாா், சிறப்புக் காவல்படை (பட்டாலியன்) கமாண்டன்ட் ஆனந்தன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் முத்துப்பாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல மாநகர காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையா் ந. காமினி புதிதாக தோ்வான காவலா்கள் 17 போ், தீயணைப்புத் துறையினா் 2 என 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். நிகழ்வில் காவல் துணை ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.