தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து

திருச்சி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:57 pm

Din

திருச்சி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி சவரிமுத்து தெருவைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் சேவியா் (32). இவா், மணப்பாறை பாரதிதாசன் தெரு, காந்தி நகரைச் சோ்ந்த ஸ்டாலின் (33) என்பவரிடம் சுமாா் ரூ. 40 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை பிரான்சிஸ் சேவியா் அலுவல் காரணமாக இனாம் குளத்தூா் அருகே உள்ள ஆலம்பட்டிபுதூா் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறித்த ஸ்டாலின் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரான்சிஸ் சேவியரை குத்தியுள்ளாா். இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். புகாரின் பேரில் இனாம் குளத்தூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை தேடி வருகின்றனா்.