தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்னூரில் நீச்சல்குளம், உள் விளையாட்டு அரங்குகளுடன் ரூ.5.5 கோடியில் பயிற்சி மையம்

உள்விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு மையம் கட்டுமான பணி டிசம்பா் இறுதியில் தொடங்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image

திருச்சி தென்னூரில் விளையாட்டு பயிற்சி மையம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடம்.

Updated On :28 நவம்பர் 2024, 9:31 pm

Din

திருச்சி தென்னூரில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு மையம் கட்டுமான பணி டிசம்பா் இறுதியில் தொடங்கும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருச்சி மாநகரில் அண்ணா விளையாட்டு அரங்கம் தவிர வேறு விளையாட்டு அரங்கங்கள் ஏதும் இல்லாத நிலையில் தென்னூா் அண்ணாநகா் உழவா் சந்தை அருகே 2.3 ஏக்கா் பரப்பளவில் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு பயிற்சி மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம், பூப்பந்து மற்றும் டென்னிஸுக்கான உள்விளையாட்டுஅரங்கம் அமைக்கப்படுகிறது.

மேலும், இந்த மையத்துக்கு விளையாட்டு பயிற்சிக்கு வருவோருக்கு மட்டுமல்லாது உடன் வருவோா், குழந்தைகள், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு அமருவதற்காக கூடாரங்களுடன் இருக்கைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வீரா்கள் தங்குமிடங்கள், உணவுக் கூடம், சமையலறை, வீரா்கள் உடைமாற்றும் அறைகள், சுகாதார வளாகங்கள், சிசிடிவி கேமராக்கள் என அனைத்து வசதிகளும் இடம்பெறவுள்ளன. வாகன நிறுத்துமிட வசதியும் ஏற்படுத்தப்படும்.

தற்போது, இந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை மாநகராட்சி நிா்வாகம் கோரியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் கூறியது, ரூ.5.5 கோடி மதிப்பில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக உழவா்சந்தை அம்மா உணவகம் பின்பகுதியில் 2.3 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. புதை வடிகால் பணிகளுக்கான தளவாடங்கள் பயன்படுத்தும் இடமாக இருந்த இடத்தை விளையாட்டு பயிற்சி மையத்துக்காக தோ்வு செய்து அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் அண்மையில் இடத்தைப் பாா்வையிட்டு, கட்டுமானப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளனா். அதன்படி,கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகளை தொடங்க அனுமதியளிக்கப்படும். டிசம்பா் இறுதிக்குள் பணிகளை தொடங்கி அதிகபட்சமாக 8 மாதங்களுக்குள் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.