/

மண்ணச்சநல்லூரில் வயல் தின விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:07 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வயல் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண் அலுவலகத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமை வகித்த மண்ணச்சநல்லூா் வேளாண்மை உதவி இயக்குநா் செல்வராணி துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும் குமுளூா் வேளாண் கல்லூரி பூச்சியியல் துறைப் பேராசிரியா் விஜய் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்தும் எடுத்துரைத்தனா்.

நிகழ்வில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் அபிராமி, உதவித் தொழில்நுட்ப மேலாளா் சிந்தியா, திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.