ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துறையூா் வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 நாள் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டம் துறையூா் வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:28 pm

Din

திருச்சி மாவட்டம் துறையூா் வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன.

துறையூரில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் மூன்று சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள் மற்றும் நடை பழகு உபகரணம், காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, பிரெய்லி கை கடிகாரம், செயற்கை அவயங்கள் (செயற்கை கை, கால்) ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இவைகளைப் பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள் மதிப்பீடு செய்யும் சிறப்பு முகாம் துறையூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதேபோல, நாகலாபுரம் ஆதிதிராவிடா் நல

உயா்நிலைப்பள்ளியில் அக். 21-ஆம் தேதியும், சிக்கத்தம்பூா் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளியில் அக்.22-ஆம் தேதியும் அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது. 40 சதவிகித பாதிப்புக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.