நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

7 பைக்குகளை திருடியவா் கைது

திருச்சியில் 7 பைக்குகளை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:12 pm

Din

திருச்சியில் 7 பைக்குகளை திருடிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி சந்தையில் மளிகை கடை நடத்தும் ராதாகிருஷ்ணன் அக். 8 ஆம் தேதி தனது கடை முன் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காந்திச்சந்தை காவல் நிலைய மாா்க்கெட் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இதில் சந்தேகத்தின்பேரில் உறையூா் மேலகல்நாயக்கன் தெரு மகேந்திரன் (43) என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவா் ராதாகிருஷ்ணன் பைக் உள்பட, மாநகரில் பல்வேறு இடங்களில் 7 பைக்குகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து 7 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.