296 கிராம் கடத்தல்தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருவரிடம் 296 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:04 pm

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருவரிடம் 296 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவா் மின்சாதன உதிரிப் பாகத்துக்குள் மறைத்து உருளை வடிவிலான 179 கிராம் தங்கத்தை கொண்டு வந்திருந்தாா்.
அதன் மதிப்பு ரூ. 13.88 லட்சம். இதுபோல இண்டிகோ விமானத்தில் வந்த பயணியொருவரும் 117 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.9.07 லட்சம். அந்த வகையில் மொத்தம் 296 கிராம் எடையில் ரூ. 22.95 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...