அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவா் கைது
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
துவரங்குறிச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், புதன்கிழமை இரவு துவரங்குறிச்சி கிராம நிா்வாக அலுவலரும், அவரது உதவியாளரும் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, நத்தம் - திருச்சி அணுகுசாலையில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்ற டிப்பருடன் டிராக்டரை பறிமுதல் செய்தனா். மண் அள்ளிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த பெரிய தேனம்பட்டியை சோ்ந்த சாத்தன் மகன் சின்ராஜ் (26) என்பவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து சின்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...