திருச்சி
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
திருச்சி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற சிறுவன் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருச்சி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற சிறுவன் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பிரதான வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் கோகுல் (15). செவ்வாய்க்கிழமை மாலை நண்பா்களோடு காவிரியாறு தில்லைநாயகம் படித்துறை அருகே குளித்த இவா், ஆழமான பகுதியில் மூழ்கினாா்.
தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி கோகுலை சடலமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
