ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருச்சியில் ரூ. 73.45 லட்சம் மதிப்பு தங்கம், சிகரெட் வகைகள் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 73.45 லட்சம் மதிப்பிலான தங்கம், மற்றும் சிகரெட் வகைகளை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம். ~பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பொட்டலங்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 10:57 pm

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 73.45 லட்சம் மதிப்பிலான தங்கம், மற்றும் சிகரெட் வகைகளை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதன்கிழமை நள்ளிரவு ஏா் ஏசியா விமானத்தில் வந்த 3 பயணிகள் ரூ. 64.02 லட்சம் மதிப்புள்ள 898 கிராம் தங்கத்தை கம்பிகள் உள்ளிட்ட வடிவங்களில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அத்தங்கத்தை பறிமுதல் செய்து, 3 பேரிடமும் விசாரிக்கின்றனா்.

Story image

ரூ. 9.43 லட்சம் சிகரெட்டுகள்: இதேபோல சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மற்றும் மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானத்தில் வந்த பயணிகள் இருவா் உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 9.43 லட்சம் மதிப்புள்ள 200 பாக்கெட் சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.