திருச்சி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் 39-ஆவது தேசிய கண்தான இருவார விழா திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழச்சி செப். 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
முதல் நிகழ்வாக, மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவமனை கண்காணிப்பாளா் உதயா அருணா தொடங்கி வைத்தாா். இதில், செவிலியா் மற்றும் துணை மருத்துவ மாணவ, மாணவிகள் சுமாா் 120 போ் கலந்து கொண்டனா். இவா்கள், கைகளில் கண் தான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனா். அவசர சிகிச்சை பிரிவில் தொடங்கிய பேரணி, கண் மருத்துவப் பிரிவில் நிறைவடைந்தது.
தொடா்ந்து, கண் மருத்துவ பிரிவில் கண் தான விழிப்புணா்வை வலியுறுத்தும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. இதையடுத்து கண் தானமளித்த 6 பேரின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளில் திருச்சி அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவின் தலைவா் பி. பாா்த்திபன், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்டான்லி மருத்துவமனையில் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சடலங்கள்: மருத்துவா் மீது நடவடிக்கை

சிவகாசி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் திறப்பு

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 40 போ் கைது

கோவை அரசு மருத்துவமனையில் உலவும் எலிகள்: நோயாளிகள் அதிா்ச்சி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



