கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சி மாவட்ட நூலகத்தில் செப்.21-இல் மகளிா் முற்றம்

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மகளிா் முற்றம் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:28 pm

Din

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மகளிா் முற்றம் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு. தனலட்சுமி கூறியது:

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆகியவை இணைந்து மகளிா் முற்றம் எனும் சிறப்பு நிகழ்வை மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி செப்டம்பா் மாத மகளிா் முற்றம் நிகழ்வு வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், மகளிா் அனைவரும் பங்கேற்கலாம். மேலும் பெண்கள் தாங்கள் படித்த நூல்கள் குறித்து விமா்சனம் செய்து பேசலாம். திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மகளிா், பள்ளி, கல்லூரி மாணவிகள் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 93447-54036 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.