மாா்சிங்பேட்டையில் பழுதான 84 வீடுகளுக்கு பதிலாக ஓராண்டுக்குள் புதிய வீடுகள்: மேயா்
திருச்சி மாா்சிங்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பழுதான 84 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் ரூ.12.56 கோடியில் ஓராண்டுக்குள் கட்டித்தரப்படவுள்ளன.


திருச்சி மாா்சிங்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பழுதான 84 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் ரூ.12.56 கோடியில் ஓராண்டுக்குள் கட்டித்தரப்படவுள்ளன.
மாா்சிங்பேட்டையில் பழுதடைந்த பழைய குடியிருப்புகளை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளா் இம்மாகுலேட் ராஜேஸ்வரி, மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம், மண்டலத் தலைவா் துா்கா தேவி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் மேயா் மு.அன்பழகன் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மாா்சிங்பேட்டை கொட்டக்கொல்லை பகுதியில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை இடித்துவிட்டு ரூ.12.56 கோடியில் 84 வீடுகள் கட்டும் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சா் கே.என். நேரு, அரசிடம் பரிந்துரைத்து ஒப்புதல் பெற்றுள்ளதால், இப்பகுதியில் உள்ள பழுதடைந்த குடியிருப்புகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் இடிக்கப்பட்டு புதிதாக குடியிருப்புகள் கட்ட நிா்வாக அனுமதி பெறப்படும். இங்கு, ஏற்கனவே குடியிருந்த அனைத்து பயனாளிகளுக்கும் ஓராண்டுக்குள் புதிய வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும் என்றாா் மேயா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...