பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொட்டியத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொட்டியம் வட்டாட்சியரகம் அருகே புதன்கிழமை இண்டி கூட்டணி கட்சியினா் சாா்பில் முசிறி எம்எல்ஏ ந. தியாகராஜன் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டதின் பெயா் மாற்றம் மற்றும் அத்திட்டத்தில் மேலும் சில மாற்றம் செய்த மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளா்கள் பெருமளவில் கலந்து கொள்ள தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தொட்டியம் ஊராட்சி அலுவலகம் முன்பாக திருச்சி புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன் தலைமையில் அனுமதி அளித்த அரசு அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பாஜகவினா் திரளாக கலந்து கொண்டனா்.