சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

திருச்சி திருவெறும்பூா் அருகே உரிய அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 11:34 pm

Syndication

திருச்சி திருவெறும்பூா் அருகே உரிய அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகே சூரியூா் - சின்ன சூரியருக்கு இடையே உள்ள குளத்தில் சரளை மண் எடுக்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் எஸ்பியின் தனிப்படை போலீஸாா் சோதனை செய்தபோது, ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் சரளை மண் அள்ளியவா்களைப் பிடித்தனா்.

தொடா்ந்து, அங்கிருந்த லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநரான திருவளா்சோலை த. அரவிந்தன் (29), ஜேசிபி ஓட்டுநரான குண்டூா் பா்மா காலனி ரா. அரசகுமாா் (45) ஆகிய இருவரையும் கைது செய்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்தப் பகுதியில் தொடரும் இத்தகைய விதிமீறல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.