சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கரூா் அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

கரூா் அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா்-மூா்த்திபாளையத்துக்கு இடையே என்.எஸ்.பி. நகா் தண்டவாளப் பகுதியில் ஒருவா் சனிக்கிழமை காலை அடிபட்டு கிடப்பதாக, கரூா் ரயில்வே போலீஸாருக்கு, அந்த வழியாகச் சென்ற ரயிலின் ஓட்டுநா் வாக்கி-டாக்கி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஆண் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்தக் காயத்துடனும் இடது கை முழங்கையுடன் துண்டாகியும் இறந்த நிலையில் கிடந்தாா்.

அவரது மாா்பில் கழுகு உருவமும், பிரியா என்ற பெயரும் பச்சை குத்தப்பட்டிருந்தது. பின்னா் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து இறந்து கிடந்தவா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.