ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி கோயில்களில் புத்தாண்டு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாவட்டக் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:13 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாவட்டக் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில்களில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவற்றில் ஸ்ரீரங்கம் கோயிலில் சுமாா் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா், திருவாசி மாற்றுரை வரதீஸ்வரா், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா், உத்தமா், இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.