தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

முசிறி அருகே மணல் கடத்திய இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:55 am

Din

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் காவிரிப் பகுதியில் மணல் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேரில் விஏஓ திலகா அய்யம்பாளையம் காவிரி கரை விநாயகா் கோயில் அருகே ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவ்வழியாக பெரம்பூா் காலனி கீழத்தெருவை சோ்ந்த மகேஸ்வரன் (29) இருசக்கர வாகனத்தில் 4 மணல் மூட்டைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மணல் மூட்டைகளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, முசிறி காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ. திலகா கொடுத்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பரசுராமன் வழக்கு பதிந்து விசாரிக்கிறாா்.