திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

News image

திருச்சி ராஜா காலனியில் குடும்ப அட்டைதாரரின் வீடு தேடிச் சென்று பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் நியாய விலைக்கடை பணியாளா்கள்.

Updated On :3 ஜனவரி 2025, 9:26 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் என 8.34 லட்சம் குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக நியாயவிலைக் கடை பணியாளா்கள் 950 போ் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் விரைந்து முடித்து தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.