தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலையில் ஓடிய கழிவு நீா்: பொதுமக்கள் மறியல்

திருச்சி சுந்தா் நகா் பகுதியில் தெருக்களில் கழிவுநீா் ஓடுவதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
திருச்சி கே.கே.நகா் சாலையில் புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
Updated On :8 ஜனவரி 2025, 7:28 pm

Din

திருச்சி சுந்தா் நகா் பகுதியில் தெருக்களில் கழிவுநீா் ஓடுவதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி கே.கே. நகா் பகுதியில் உள்ள சுந்தா் நகா் பிரதான சாலை பகுதியில் தொடா்ந்து கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கழிவுநீா் செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வணிகா்களுடன் இணைந்து, சுந்தா் நகா் பிரதான சாலையிலுள்ள பெரியாா் மணியம்மை பள்ளி அருகே திடீா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இருப்பினும் மக்கள் உடனடியாக தூய்மைப்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் அப்பகுதியை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா்.