தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு

திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
திருச்சி பெரியமிளகுபாறையில் வியாழக்கிழமை பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய ஆட்சியா் மா.பிரதீப்குமாா் உடன் மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.
Updated On :9 ஜனவரி 2025, 8:17 pm

Din

திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்ததன் தொடா்ச்சியாக, திருச்சியில் பெரியமிளகுபாறை நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசு தொகுப்புகளை வழங்கி ஆட்சியா் கூறியது: திருச்சி மாவட்டத்திலுள்ள 8. 34 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 1219 நியாய விலைக்கடைகள் மூலமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு மற்றும் வேட்டி, சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, டோக்கன்கள் வழங்கப்பட்ட அனைவருக்கும் ஜன. 9 ஆம் தேதி முதல் ஜன.12ஆம் தேதி வரை வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறத்தவறிய அனைவரும் ஜன.13 ஆம் தேதி அந்தந்த நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா, கோட்டாட்சியா் கே. அருள், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் தா. அரசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சு. சாந்தி, வேளாண்மை இணை இயக்குநா் பூ. வசந்தா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பா.செந்தில்குமாா், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளா் வெ. மாரிச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.