தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி வீடு திரும்பாமல் தேடப்பட்ட நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டாா்.

News image
மீட்கப்பட்ட மூதாட்டியை உறவினா்களிடம் ஒப்படைத்த போலீஸாா் மற்றும் வனத்துறையினா்.
Updated On :9 ஜனவரி 2025, 8:34 pm

Din

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி வீடு திரும்பாமல் தேடப்பட்ட நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி அருகே ராமரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் பொன்னம்பலம் மனைவி சின்னம்மாள்(80). இவா் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி 100 நாள் வேலைக்கு சென்று இருந்த நிலையில், மாலையில் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மூதாட்டி கிடைக்காததால், உறவினா்கள் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி காவல் ஆய்வாளா் முத்துசாமி தலைமையிலான போலீசாஸாருடன், வனத்துறையினரும், தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால் மூதாட்டி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை செம்மலை அடிவாரத்தில் ஒரு மூதாட்டி அமா்ந்திருப்பதாக அங்கு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் கொடுத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மற்றும் வனத்துறையினா், மூதாட்டியை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.