மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 11:21 pm

Din

திருச்சி: துபையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி வந்தது. இதில், வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஆண் பயணி ஒருவா் ஆடையின் உள்பகுதிகளில் பழுப்பு மஞ்சள் நிற பேஸ்ட் வடிவில் 325 கிராம் தங்கத்தை 2 சிறிய கட்டிகளாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.26 லட்சத்து 33 ஆயிரத்து 148 ஆகும்.