எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சி தனியாா் மருத்துவனையிலிருந்து சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி வீடு திரும்பினாா்

திருச்சியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை பிற்பகல் வீடு திரும்பினாா்.

News image
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
Updated On :27 ஜனவரி 2025, 8:51 pm

Din

திருச்சி: திருச்சியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை பிற்பகல் வீடு திரும்பினாா்.

திருச்சி விமானநிலையத்துக்கு சனிக்கிழமை வந்தபோது, அமைச்சருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா் அமைச்சா்.

மருத்துவமனையில் அமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தாா்.

கடந்த 2 நாள்களாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த அமைச்சா் எஸ். ரகுபதி, திங்கள்கிழமை பிற்பகல் வீடு திரும்பினாா்.