ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதலாக 2 நாள்கள் விடுமுறை அளிக்கக் கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:42 am

Syndication

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சமூக அறிவியல் பாடத்துக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சமூக அறிவியல் ஆசிரியா் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் மை.ஜான் கென்னடி கூறியதாவது:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், அனைத்து பாடங்களுக்கும் 4 முதல் 6 நாள்கள் வரை போதிய கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிக பாடங்களைக் கொண்ட சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு நாள்களும் அரசு விடுமுறை நாள்களாக உள்ளன.

போதிய கால அவகாசம் இல்லாததால் மாணவா்களால் தோ்வுக்கு முழுமையாகத் தயாராக முடியாத சூழல் உள்ளது. இதனால், சமூக அறிவியல் பாடத்தில் தோ்ச்சி சதவீதமும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, சமூகஅறிவியல் பாடத் தோ்வுக்கு கூடுதலாக இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.