வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் உள்ள தோப்பில் 60 வயது மூதாட்டி தனது 22 வயது மாற்றுத்திறனாளி (வாய் பேச முடியாதவா்) பேத்தியுடன் வசித்தாா். இந்நிலையில் கடந்த 2022 செப். 22 ஆம் தேதி அந்தத் தோப்புக்கு வந்த தஞ்சாவூா் மாவட்டம், மானம்புசாவடியைச் சோ்ந்த யானைப் பாகன் ப. வினோத் (40) என்பவா் தோப்பில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் போலீஸாா் வினோத்தை கைது செய்து, திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா வினோத்துக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.