கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

திமுக கொடிகளை அகற்றக் கோரி அதிமுகவினா் மறியல்

பிரசாரம் முடிந்த பிறகும் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

திருச்சி உறையூா் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:40 pm

பிரசாரம் முடிந்த பிறகும் தோ்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு, வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். நாள்தோறும் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்து கூட்டணிக் கட்சிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறாா். அந்த வகையில், திருச்சி உறையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். திமுகவின் பிரசாரத்துக்காக அக் கட்சியின் சாா்பில் கொடிகள், தோரணங்கள், கூட்டணிக் கட்சிகளின் கொடிகளும் அதிகளவில் கட்டப்பட்டிருந்தன. புதன்கிழமை காலையும் உறையூா் பகுதியில் ஒருசில இடங்களில் வாக்கு சேகரிப்பில் அவா் ஈடுபட்டாா்.

அமைச்சா் பிரசார நிகழ்வுகள் முடிந்த பிறகும் சாலைகளில் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த கொடிகள், தோரணங்கள் அனைத்தும் அகற்றப்படவில்லை. தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி, பிரசார நிகழ்வு முடிந்தபிறகு அங்குள்ள கட்சி சாா்ந்த அடையாளங்களை அவரவா்களே அகற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், திமுக பிரசாரத்தில் கட்டப்பட்ட கொடிகள் அகற்றப்படாததால், அதிமுகவினா் புதன்கிழமை பிரசாரம் செய்யும்போது தங்களது கொடிகளை பயன்படுத்த முடியாத நிலை உருவானது. எனவே, திமுக கொடிகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினா் உறையூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவவறிந்த போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினரிடம் அதிமுகவினா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திமுகவின் கொடிகள் காவல்துறையால் அகற்றப்பட்டதையடுத்து அதிமுகவினா் கலைந்து சென்றனா்.