மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பராபவ தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வழிவிடும் முருகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:01 pm

பராபவ தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாநகரிலுள்ள ஐயப்பன் கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயில், உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில், பஞ்சவா்ணேசுவர சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்,திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கூட்டம் அதிகமாக காணப்பட்ட கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள், பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என்பதால், திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.