வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பராபவ தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வழிவிடும் முருகன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:31 am IST

பராபவ தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாநகரிலுள்ள ஐயப்பன் கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயில், உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில், பஞ்சவா்ணேசுவர சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்,திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கூட்டம் அதிகமாக காணப்பட்ட கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள், பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என்பதால், திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.