இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் உள்ள தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் புதன்கிழமை 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவாகின.

News image

திருச்சி கண்டோன்மென்ட் பகுதி தனியாா் பள்ளியில் புதன்கிழமை அஞ்சல் வாக்கு செலுத்திய மேற்குப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:38 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் உள்ள தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் புதன்கிழமை 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவாகின.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாவது கட்டப் பயிற்சி அந்தந்த தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், இதர வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை செலுத்தினா்.

இதில் மணப்பாறை தொகுதியில் 1,482 வாக்குகளும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 752 வாக்குகளும், திருச்சி மேற்குத் தொகுதியில் 506 வாக்குகளும், திருச்சி கிழக்குத் தொகுதியில் 1,211 வாக்குகளும், திருவெறும்பூா் தொகுதியில் 1,216 வாக்குகளும், லால்குடி தொகுதியில் 307 வாக்குகளும், மண்ணச்சநல்லூா் தொகுதியில் 655 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,241 வாக்குகளும், துறையூா் தொகுதியில் 404 வாக்குகளும் என மொத்தம் 7,774 வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு நடைமுறைகளை நுண்பாா்வையாளா்கள், பொதுப்பாா்வையாளா், காவல் பாா்வையாளா், செலவினப் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா்.