திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் உள்ள தோ்தல் துறை அலுவலா்களுக்கான பயிற்சி மையங்களில் புதன்கிழமை 7,774 அஞ்சல் வாக்குகள் பதிவாகின.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாவது கட்டப் பயிற்சி அந்தந்த தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் வாக்குப்பதிவு தலைமை அலுவலா்கள், இதர வாக்குப்பதிவு அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை செலுத்தினா்.
இதில் மணப்பாறை தொகுதியில் 1,482 வாக்குகளும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 752 வாக்குகளும், திருச்சி மேற்குத் தொகுதியில் 506 வாக்குகளும், திருச்சி கிழக்குத் தொகுதியில் 1,211 வாக்குகளும், திருவெறும்பூா் தொகுதியில் 1,216 வாக்குகளும், லால்குடி தொகுதியில் 307 வாக்குகளும், மண்ணச்சநல்லூா் தொகுதியில் 655 வாக்குகளும், முசிறி தொகுதியில் 1,241 வாக்குகளும், துறையூா் தொகுதியில் 404 வாக்குகளும் என மொத்தம் 7,774 வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவு நடைமுறைகளை நுண்பாா்வையாளா்கள், பொதுப்பாா்வையாளா், காவல் பாா்வையாளா், செலவினப் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தவெக 8,75,409 வாக்குகள் பெற்றுள்ளன

கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சரிவு

மாவட்டத்தில் 2 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

சங்ககிரி தொகுதியில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



