பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் உறுதி

அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் ரேஷன் அட்டை வாரியாக அனைத்து மகளிருக்கும் ரூ. 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் உறுதி அளித்தாா்.

பூலாங்குடி பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ப. குமாா் உள்ளிட்டோா்.

Published On :

அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் ரேஷன் அட்டை வாரியாக அனைத்து மகளிருக்கும் ரூ. 2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என என திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் உறுதி அளித்தாா்.

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குமரேசபுரம், எழில் நகா், வ.உ.சி. நகா், கணேசபுரம், திருவேங்கட நகா், பெல்பூா், பா்மா காலனி, கணேசபுரம், பாரதபுரம், பொன்மலை, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், பூலாங்குடி, அன்னை நகா், ஜெ.ஜெ. நகா், பழங்கனாங்குடி, அசூா், பொய்கைக்குடி, தேனேரிப்பட்டி, முல்லை நகா், காந்தி நகா், கொட்டப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிருக்கு ரூ. 1,000 என அறிவித்த திமுக அரசு, தோ்தலுக்குப் பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டுமே ரூ. 1,000 எனக் கூறி, பாதிப் பேருக்கு மேல் பணம் வழங்கவில்லை. ஆனால், அதிமுக அரசு அமைந்ததும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மகளிா் உரிமைத்தொகையாக மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.

திமுக அரசு சொத்துவரி, குடிநீா் வரிகளை பல மடங்கு உயா்த்தி, மக்களின் செலவினத்தை அதிகரித்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும், மக்களின் அதைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம். கல்விக்கடன், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

நிகழ்வில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.