கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

ஹோட்டலில் தங்கியிருந்த சிமென்ட் ஆலை மேலாளா் உயிரிழப்பு

திருச்சியில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கரூரைச் சோ்ந்த தனியாா் சிமென்ட் ஆலை மேலாளா் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 5:24 am IST

திருச்சியில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கரூரைச் சோ்ந்த தனியாா் சிமென்ட் ஆலை மேலாளா் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், புலியூா் செல்வா நகரைச் சோ்ந்தவா் எஸ். மகுடேஸ்வரன் (42), ஆந்திர பிரதேசம், நந்தியால் பகுதி தனியாா் சிமென்ட் ஆலையின் உற்பத்திப் பிரிவு மேலாளா்.

இந்நிலையில் அரியலூா் மாவட்டம், டால்மியாபுரத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையை ஆய்வு செய்ய கடந்த ஏப்ரல் 20 (திங்கள்கிழமை) திருச்சிக்கு வந்த இவா், சத்திரம் அருகேயுள்ள தனியாா் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவரது ஓட்டுநா் மகுடேஸ்வரன் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகலறிந்து சென்ற கோட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.