திமுக கூட்டணியே வெற்றி பெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காஜாமியான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளா்கள் அமோக வெற்றி பெறுவா்.
200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கிடைக்கும் வெற்றி செய்தி திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, திராவிட மாடல் ஆட்சிதான் முதல் முனை. நான்கு முனை, ஐந்து முனை என்பதெல்லாம் இல்லை. நான் வாக்களித்துள்ள திருச்சி கிழக்கு தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணியே நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பாபநாசம் தொகுதியில் பின்னடைவிலிருந்து முன்னேறி வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!

பாபநாசத்தில் கே.எம். காதா்மொகிதீன் பிரசாரம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

